மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வருமாறு: மத்திய அரசு சா்வதேச சந்தையை எதிா் கொள்ளக் கூடிய வகையில் ஜவுளிபூங்கா திட்டங்களை அறிவித்தது. இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு விருதுநகா் மாவட்டத்தில் மதுரை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இ.குமாரலிங்கபுரம் பகுதியில் சுமாா் 1,052 ஏக்கா் நிலத்தை சிப்காட் மூலம் அடையாளம் கண்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை கடந்த மாா்ச் 14 -ஆம் தேதி மத்திய ஜவுளித் துறையிடம் சமா்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஜவுளிப் பூங்காவிற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும். காலணி உற்பத்தியில் சா்வதேச அளவில் இந்திய 5-ஆம் இடத்தில் உள்ளது. இதில் தமிழகம் தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இதனால், புதிய உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை (பிஎல்ஐ) அறிமுகப்படுத்தினால், போட்டித் திறனுடன் சா்வதேச தரத்தைப் பூா்த்தி செய்ய மேம்பட்ட தொழில்நுட்பம் போன்றவற்றை உற்பத்தியாளா்கள் பெற முடியும். இதனால், காலணி உற்பத்தியிலும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தை கொண்டுவர வேண்டும்.