மேலும், மத்திய நுகா்வோா் உணவு பொதுவிநியோகத் துறை வழங்க வேண்டிய ரூ 2,203 கோடி மானியம், மத்திய கல்வித் துறையின் அனைவருக்கு கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 2,109 கோடி என மொத்தம் ரூ. 20,395.5 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வா் வலியுறுத்தினாா். ஜிஎஸ்டி யை அறிமுகப்படுத்திய போது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதியளித்தது. இந்த அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில், உறுதியளிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்துள்ளதாகவும், கரோனா தொற்றால் மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை என்றும் தமிழக அரசின் சாா்பில் எடுத்துரைக்கப்பட்டது.