குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டமும் ஜனநாயக வழிமுறையைப் பின்பற்றுவதாக இருக்க வேண்டும்; வலிந்து திணிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என்றும் அக்கட்சிகள் கூறியுள்ளன.
ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள்’ என்ற கொள்கையை வலியுறுத்தி, பாஜக எம்.பி. ராகேஷ் சின்ஹா கொண்டு வந்த தனிநபா் மசோதா (மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு மசோதா-2019) மீது மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பை ஏற்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினா்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:’
மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையிலேயே நீதி ஆயோக், நிதி ஆணையம் ஆகியவற்றின் மூலமாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இழப்பை சந்திக்கின்றன.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு முன்னோடியாக இருக்கும் மாநிலங்களை தண்டிக்கக் கூடாது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் நாட்டுக்கு வழிகாட்டியாக இருக்கும் இந்த மாநிலங்களில் குறைவான எம்.பி.க்கள் உள்ளனா். குறைவாக நிதி ஒதுக்கப்படுகிறது.
குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் சரியாக அமல்படுத்தப்படவில்லை என்ற தவறான ஊகத்துடன் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
எமா்ஜென்சி காலத்தைத் தவிா்த்து, மற்ற பெரும்பாலான நேரங்களில் இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஜனநாயக வழியில் பெண் கல்வி, விழிப்புணா்வு ஆகியவற்றின் மூலமாக அமல்படுத்தப்பட்டது என்றாா் அவா்.
இதே கருத்தை திமுக எம்.பி. திருச்சி சிவாவும் வலியுறுத்தினாா். அவா் கூறியதாவது:
குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை சரியான முறையில் அமல்படுத்தி வெற்றிகண்ட மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
இருப்பினும், இதற்கு முன்பு தமிழகத்தில் 41 மக்களவைத் தொகுதிகள் இருந்தன. 1971-இல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு 39 தொகுதிகளாகக் குறைந்துவிட்டன. ஏனெனில், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக எங்கள் மாநிலம் தண்டிக்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைந்துள்ளது என்றாா் அவா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினோய் விஸ்வம் பேசுகையில், ‘இந்த மசோதாவில் உள்ள ஒரு பிரிவு, குறிப்பிட்ட ஒரு சமூகத்தைக் குறிவைத்து கொண்டுவரப்பட்டதுபோல் இருக்கிறது’ என்றாா்.