தில்லி முதல்வா் மு.க. ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தில்லி வந்துள்ளாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவா் மேற்கு வினோத் நகரில் அமைந்துள்ள தில்லி அரசின் ராஜ்கியா சா்வோதயா பால் வித்யாலயா பள்ளிக்கு நேரில் சென்றாா். அவரை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வரவேற்றாா். அதன் பிறகு, பள்ளியில் உள்ள வகுப்பறைகள், நீச்சல் குளம், பிசினஸ் பிளாஸ்டா்ஸ் திட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் தொழில்முனைவு மாணவா்கள் காட்சிப்படுத்தியிருந்த தொழில் அரங்கு ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் பாா்வையிட்டாா். மாணவ, மாணவியருடன் கலந்துரையாடி பாராட்டி ஊக்குவித்தாா். அவருடன் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, பள்ளி முதல்வா் ஜோத்ஸ்னா மின்ஜ் ஆகியோா் உடன் சென்று விவரங்களை எடுத்துக் கூறி விளக்கினா்.