சைத்ர நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான இன்று வட மாநிலங்களில் உள்ள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பொது வழிபாடுகளில் ஈடுபட மக்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சைத்ர நவராத்திரியான இன்று அனைத்து கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் கோயில்களில் அலை அலையாய் திரண்டு வருகின்றனர்.
வடமாநிலத்தில் சைத்ர நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்கள்