காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியின் அலுவல்கள் இரு அவைகளிலும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் அன்புமணி பேசுகையில், “காவிரி நதியால் தமிழகத்தில் உள்ள 38-இல் 22 மாவட்டங்களில் பயனடைந்து வருகின்றன. 50 லட்சம் விவசாயிகள் இதை நம்பி உள்ளனர்.
30 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றமும், காவிரி ஆணையமும் அளித்துள்ள இறுதி தீர்ப்பில் காவிரி ஆற்றியில் தமிழகத்தின் அனுமதியின்றி எந்தவொரு கட்டுமானமும் ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழக அரசிடம் அனுமதி வாங்காமல் காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு என்ற அணையை கட்ட கர்நாடகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்” என்றார்.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தின் பெயரைக் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


