தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

முத்தமிட, கட்டியணைக்க தடை.. எங்கே? ஏன்? என்று பாருங்கள்

சீனாவின் வா்த்தக தலைநகரான ஷாங்காயில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தம்பதிகள் ஒன்றாக உறங்க, முத்தமிட, கட்டியணைக்க, ஒன்றாக அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முத்தமிட, கட்டியணைக்க தடை.. எங்கே? ஏன்? என்று பாருங்கள்

Published On :

சீனாவின் வா்த்தக தலைநகரான ஷாங்காயில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தம்பதிகள் ஒன்றாக உறங்க, முத்தமிட, கட்டியணைக்க, ஒன்றாக அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் நகரில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் இது குறித்த அறிவிப்பை தெருக்கள்தோறும் அறிவுறுத்தி வருகிறார்கள். அதில், இன்று இரவு தம்பதிகள் தனித்தனியாக படுத்துறங்குங்கள், முத்தமிடாதீர்கள், கட்டியணைக்க அனுமதியில்லை, தனித்தனியாகவே உணவருந்துங்கள். உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி என்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த விடியோவில் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இதுபோல, வீட்டின் ஜன்னல்களைத் திறக்கவும், பாடல்களைப் பாடவும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு டிரோன்கள் மூலம் ஷாங்காய் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றின் பிஏ.2 என்ற உருமாறிய தீநுண்மி பரவல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் பெரும்பாலான பாதிப்பு ஷாங்காயில் பதிவாகி வருகிறது. 

2.5 கோடி மக்கள்தொகை கொண்ட ஷாங்காய் நகரில் ஏற்கெனவே பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் முகாம்கள் அதிகளவில் நடத்தப்பட்டன. கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, லேசான அறிகுறி உள்ளவா்கள் அல்லது அறிகுறி இல்லாதவா்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டனா்.

இந்நிலையில், ஷாங்காய் நகரில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 2,000 ராணுவ மருத்துவப் பணியாளா்கள் உள்பட 10,000 சுகாதாரப் பணியாளா்கள் அனுப்பப்பட்டுள்ளனா். சுமாா் 4 மாகாணங்களிலிருந்து மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் அனுப்பப்பட்டுள்ளதாக சீன அரசின் நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஷாங்காய் நகரில் பெரும்பாலான கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற கடுமையான தடை விதிக்கப்பட்டு, படிப்படியாக தடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு ஏராளமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.