

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
லஹரிகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டான்டியல்போரி பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஒரு வாகனத்தை மறித்து அங்கிருந்த 390 கிராம் ஹெராயினை மீட்டதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லால் பருவா தெரிவித்தார்.
28 சோப்புப் பெட்டிகளில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக அவர் கூறினார். விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.