6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாணேவில் காணாமல் போன 10 வயது சிறுவன் குஜராத்தில் மீட்பு

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் காணாமல் போன 10 வயது சிறுவன் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 12:18 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் காணாமல் போன 10 வயது சிறுவன் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து மேலும் கூறியதாவது, 

கடந்த மாதம் கலுபூர் ரயில் நிலையத்தில் தனியாக நின்றுகொண்டிருந்த சிறுவன், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள ரிமாண்ட் ஹோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். 

மார்ச் 30 அன்று ரிமாண்ட் ஹோம் நிர்வாகம் தாணே நகர காவல்துறையின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்குத் தகவல் கொடுத்தது. அவர் தாணே மாவட்டம் பிவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறி சிறுவனின் முகவரியை வழங்கியது. 

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினர், சிறுவனின் பெற்றோரைக் கண்டறிந்து, சிறுவன் அவர்களுடையதுதானா என அடையாளம் காணப்பட்டது. அதன்பின்னர் சிறுவனை அவனது குடும்பத்தாரிடம் காவல்துறையினர் சேர்ந்தனர். 

சிறுவனின் பெற்றோர்கள் கூலித்தொழிலாளர்கள், அவர்களுக்கு புகார் அளிக்கும் நடைமுறை தெரியாததால் சிறுவனை இழந்து தவிர்த்ததாக அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.