அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ்? மத்திய அரசு மறுப்பு

நாட்டில், முதல் முறையாக அதிவேகமாகப் பரவக் கூடிய உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் ஒருவருக்கு பாதித்திருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஏப்ரல் 2022, 11:36 am IST

புதுதில்லி: நாட்டில், முதல் முறையாக அதிவேகமாகப் பரவக் கூடிய உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் ஒருவருக்கு பாதித்திருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மும்பையில் 376 பேரின் கரோனா மாதிரிகளை ஒமைக்ரான் தீநுண்மியின் மரபணு வரிசைமுறை பரிசோதனை நடத்தியதில், ஒருவருக்கு உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ தொற்றும், மற்றொருவருக்கு உருமாறிய கப்பா வைரஸ் தொற்றும் பாதித்திருப்பது தெரிய வந்திருப்பதாக மும்பை மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வகை ஒமைக்ரான்-எக்ஸ்இ பாதித்த நோயாளியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரஸைக் காட்டிலும் இந்த புதிய வகை ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை 10 மடங்கு கூடுதலாக பரவும் அபாயம் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த எக்ஸ்இ வகை கரோனா பரவவில்லை. தற்போது  மும்பையில் உறுதி செய்யப்பட்ட ஒமைக்ரான்-எக்ஸ்இ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக ஆதாரங்கள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸால் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் ஏற்கனவே பரவிய கரோனா வைரஸ்களைக் காட்டிலும், தற்போது பரவி வரும் இந்த உருமாறிய ஒமைக்ரான் - எக்ஸ்இ அதிகம் பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.