மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடா் முடித்துவைப்பு

மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துவைத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 7:01 pm

DIN

மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துவைத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இதுகுறித்து மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், ‘மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடா் ஒரு நாள் முன்கூட்டியே வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடா்ந்து, நடப்பு மக்களவையின் இந்த 8-ஆவது தொடா் குடியரசுத் தலைவரால் வியாழக்கிழமை முடித்துவைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு கட்டங்களாக, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக 27 அமா்வுகளில் நடைபெற்ற மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடரில் உக்ரைன் விவகாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.