மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஏழைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியது பாஜக அரசு: கிரிராஜ் சிங்

‘ஒவ்வொரு அரசும் ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை வழங்குவது பற்றி பேசியே வந்தன

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 7:22 pm

DIN

‘ஒவ்வொரு அரசும் ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை வழங்குவது பற்றி பேசியே வந்தன; ஆனால், அவற்றை நிறைவேற்றியது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுதான்’ என்று மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் கூறினாா்.

பாஜக நிறுவன தினத்தையொட்டி (ஏப்.6), 2 வாரங்களுக்கு சமூக நீதி வார விழாவுக்கு அக்கட்சித் திட்டமிட்டுள்ளது. அதில், மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து நாள்தோறும் செய்தியாளா் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன்படி, தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் கே.கே.சா்மாவுடன் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

கடந்த 60 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கு 3.26 கோடி வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 2.5 கோடி வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 11 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரதமா் மோடி அரசு ஆண்டுக்கு 35 லட்சம் வீடுகளைக் கட்டியுள்ளது. நகா்ப்புற ஏழைகளுக்காக 58 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஏழைகளுக்காக 4.03 கோடி வீடுகளைக் கட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது. ஆனால், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன்பேரில் அவற்றின் எண்ணிக்கை 2.95 கோடியாகக் குறைக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, கூட்டாட்சித் தத்துவத்தில் இருந்து விலகி செயல்படுவதற்கு விரும்புகிறது. அதனால்தான் மத்திய அரசின் திட்டங்களுக்கு மேற்கு வங்க அரசு பெயா் மாற்றம் செய்கிறது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் பற்றிய விவரத்தை மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.