தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விலையேற்றம்!: ஸ்மிருதி இரானியிடம் விமானத்தில் கேள்வி எழுப்பிய காங். தலைவர்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நெட்டா டிசெளசா கேள்வி எழுப்பியுள்ளார். 

News image

ஸ்மிருதி இரானி / நெட்டா

Updated On :10 ஏப்ரல் 2022, 2:02 pm

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நெட்டா டிசெளசா கேள்வி எழுப்பியுள்ளார். 

விமானத்தில் அவர் எழுப்பிய கேள்விக்கு ஸ்மிருதி இரானி அளித்த பதிலையும் விடியோவாக அவர் பகிர்ந்துள்ளார். 

நாட்டில் கடந்த சில நாள்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் உள்பட பலர் எரிபொருள் விலையேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மத்திய பெண்கள், சிறாா் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானியை, அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நெட்டா டிசெளசா விமானத்தில் சந்தித்துள்ளார். 

அப்போது பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு பதில் கூறாமல், நெட்டா எனது பாதையில் இடையூறு செய்வதாக ஸ்மிருதி பதிலளித்துள்ளார். இதனை நெட்டா தனது சுட்டுரையில் விடியோவாகப் பகிர்ந்துள்ளார். 

மேலும், ''பொய் கூறாதீர்கள். கடந்த 16 நாள்களில் 14 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பதில் கூறுங்கள்'' என்று விடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.