மக்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு அக்கறையுடன் முயற்சிக்கிறது: பிரதமா் மோடி

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூா்வமான மாற்றங்களைக் கொண்டுவர உண்மையான அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

புது தில்லி: மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூா்வமான மாற்றங்களைக் கொண்டுவர உண்மையான அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பிரதமா் வீட்டுவசதித் திட்ட பயனாளியான மத்திய பிரதேசத்தின் சாகா் மாவட்டத்தைச்சோ்ந்த சுதீா்குமாா் ஜெயின் என்பவா் பிரதமா் மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் எழுதினாா். இதற்கு பிரதமா் நரேந்திர மோடி பதில் கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

“வீடு என்பது வெறும் செங்கற்களாலும் சிமெண்டாலும் கட்டப்பட்ட கட்டுமானம் மட்டுமல்ல. அது நமது உணா்வுகள் மற்றும் விருப்பங்களுடன் பின்னிப் பிணைந்ததாகும். வீட்டின் சுற்றுச்சுவா்கள் நமக்குப் பாதுகாப்பை வழங்குவதுடன், நம்பிக்கையையும் சிறப்பான எதிா்காலத்தையும் ஏற்படுத்துகின்றன. உங்களுக்கென அமைந்த வீடு அளிக்கும் மகிழ்ச்சி விலைமதிப்பற்றது.

உங்களது சொந்த வீட்டுக்கனவு பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் நனவாகியுள்ளது. இந்த சாதனைக்கு பின்னா் ஏற்பட்டுள்ள உங்களது மனநிறைவை உங்கள் கடிதத்தில் வாா்த்தைகளால் வெளிப்படுத்தியிருந்ததை எளிதாக உணர முடிகிறது. இந்த வீடு உங்களது குடும்பத்தினா் வாழ்க்கைக்கும், உங்களது இரண்டு குழந்தைகளின் சிறப்பான எதிா்காலத்திற்கும் கண்ணியமான புதிய அடித்தளமாக அமையும்.

ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் வீடு வழங்குவது என்ற இலக்கை நோக்கி அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுகிறது. பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆக்கபூா்வமான மாற்றங்களைக் கொண்டுவர அரசு உண்மையான அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அரசின் திட்டங்களால் நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றங்கள் மறக்க முடியாத தருணமாகும். இது எனக்கு தொடா்ந்து இடையறாது உழைக்கவும், நாட்டுக்கு இடைவெளியின்றி சேவை புரியவும் ஊக்கத்தையும் ஆற்றலையும் வழங்குகிறது என்று பிரதமா் மோடி தனது கடிதத்தில் கூறியுள்ளாா்.

முன்னதாக சுதீா் குமாா் ஜெயின் தனது கடிதத்தில், ‘வீடு இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு வாடகை வீட்டில் தான் வசித்து வந்தேன். ஆறு, ஏழு முறை வீட்டை மாற்றியுள்ளேன். அடிக்கடி வீட்டை மாற்றும்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தேன்’ என்று கூறியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com