நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குருகிராம் கோயிலில் பழச்சாறு அருந்திய 25 பேருக்கு மயக்கம்

குருகிராமில் உள்ள ஒரு கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 3:27 pm IST

குருகிராமில் உள்ள ஒரு கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்தது, 

குருகிராமின், ஃபரூக் நகரில் உள்ள புத்தோ மாதா கோயிலில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கோயிலில் ஒரு நபர் அளித்த பழச்சாற்றைச் சாப்பிட்ட பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பழச்சாற்றை வழங்கிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரூக்நகர் காவல்துறை அதிகாரி சுனில் பெனிவால் கூறினார். 

அடையாளம் தெரியாத நபர் கோயில் வளாகத்தில் பழச்சாறு பிரசாதம் எனக் கூறி அங்கிருந்தோரிடம் பரிமாறிக் கொண்டிருந்ததாக ஒருவர் தெரிவித்தார். 

பிரசாதம் என வழங்கப்பட்ட பழச்சாற்றைக் கொடுத்தவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றது. அடையாளம் தெரியாத அந்த நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.