தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஏப்ரல் 21-இல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்

​பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஏப்ரல் 21-ம் தேதி இந்தியா வருகிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஏப்ரல் 2022, 6:41 am

DIN


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான விரிவான பேச்சுவார்த்தைக்காக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஏப்ரல் 21-ம் தேதி இந்தியா வருகிறார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள ஆமதாபாத்துக்கு ஏப்ரல் 21-ம் தேதி வருகிறார் போரிஸ் ஜான்சன். பிரிட்டன் பிரதமராக இந்தியாவுக்கு இதுவே அவரது முதல் பயணம். இந்தியா மற்றும் பிரிட்டனிலுள்ள முக்கியத் தொழில் முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன. 

பின்னர் ஏப்ரல் 22-ம் தேதி போரிஸ் ஜான்சன் புதுதில்லி செல்கிறார். அங்கு இந்தியா, பிரிட்டன் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. 

இதனிடையே, ஆமதாபாத்தில் அவர் முக்கியத் தொழில்துறையினரையும் சந்திக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.