இந்தியா
உ.பி.யில் எலுமிச்சை விலை குறைய சிறப்பு பூஜை
வாரணாசியில் உள்ள மா ஆதிசக்தி கோயிலில் எலுமிச்சை பழத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வாரணாசி (உத்தர பிரதேசம்): வாரணாசியில் உள்ள மா ஆதிசக்தி கோயிலில் எலுமிச்சை பழத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கோயிலில் அம்மனை சாந்தப்படுத்த 11 எலுமிச்சை பழம் பூஜை செய்து அம்மனுக்கு செலுத்தப்பட்டது.
பூஜைக்கு ஏற்பாடு செய்த ஹரிஷ் மிஸ்ரா, நமது விருப்பங்கள் நிறைவேறும் சக்தி பூஜைக்கு உண்டு என்றும், இன்னும் சில நாட்களில் எலுமிச்சையின் விலை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பூஜை எலுமிச்சை வாங்கோரின் அனைவரின் நலனுக்காக செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.