2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பாராபங்கி சிறையில் ரமலான் நோன்பிருக்கும் இந்து, முஸ்லிம் கைதிகள்

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி சிறைச்சாலையில், 15 இந்து கைதிகள் உள்பட சுமார் 250 சிறைக் கைதிகள் ரமலான் நோன்பிருக்கிறார்கள்.

News image
பாராபங்கி சிறையில் ரமலான் நோன்பிருக்கும் இந்து, முஸ்லிம் கைதிகள்
Updated On :22 ஏப்ரல் 2022, 12:56 pm

DIN


பாராபங்கி: உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி சிறைச்சாலையில், 15 இந்து கைதிகள் உள்பட சுமார் 250 சிறைக் கைதிகள் ரமலான் நோன்பிருக்கிறார்கள்.

தங்களுடன் சிறையிலிருக்கும் முஸ்லிம் தோழர்களுடன், 15 இந்து கைதிகளும் செஹ்ரிக்காக அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார்கள். நாள் முழுக்க நோன்பிருந்து, மாலையில் நோன்பை முடிக்கிறார்கள்.

இந்த ஆண்டு சிறைச் சாலையில் இருக்கும் 250 கைதிகள் ரமலான் நோன்பிருக்கிறார்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரமலான் நோன்பிருக்கும் சிறைக் கைதிகளுக்கு செஹ்ரி மற்றும் இஃப்தாருக்காக பேரீட்சம்பழம் பால், தேநீர் போன்றவற்றை சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்து வைத்துள்ளது. இங்கு இந்து - முஸ்லிம் கைதிகள் ஒன்றாக இணைந்து ரமலான் நோன்பிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும், நாள்தோறும் ஒரு முறை மட்டும் அவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஃப்தாருக்காக சில சிறப்பு உணவுகளும் தயாரித்துக் கொடுக்கப்படுகிறது. இது தொடர்ந்து நீடித்தால், இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு இந்த சிறைச்சாலை ஒரு முன்னுதாரணமாக திகழும் என்கிறார்கள் சிறைச்சாலை அதிகாரிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.