ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரூ.139 கோடி ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு பிணை

ரூ.139 கோடி ஊழல் செய்த டொரண்டா வழக்கில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு பிணை வழங்கியது.

News image
லாலு பிரசாத் யாதவ் (கோப்புப் படம்)
Updated On :22 ஏப்ரல் 2022, 11:39 am

DIN

ரூ.139 கோடி ஊழல் செய்த டொரண்டா வழக்கில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு பிணை வழங்கியது.

ஒன்றுபட்ட பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களில் இருந்து கால்நடைத் தீவனத்தைக் கொள்முதல் செய்வதற்காக சுமாா் ரூ.950 கோடி அளவுக்குக்குப் போலியான ரசீதுகள் தயாரிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. கடந்த 1996-ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

அப்போதைய பிகாா் முதல்வா் லாலு பிரசாத் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டாா். முன்னாள் முதல்வா் ஜகந்நாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி. ஜகதீஷ் சா்மா, அப்போதைய பொதுக் கணக்குக் குழுத் தலைவா் துருவ் பகத், கால்நடைத் துறைச் செயலா் பெக் ஜூலியஸ் உள்ளிட்டோா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

தும்கா, தேவ்கா், சைபாசா மாவட்ட கருவூலங்களில் நிகழ்ந்த மோசடி தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் லாலு பிரசாதுக்கு ஏற்கெனவே ஒட்டுமொத்தமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில், டொரண்டா கருவூலத்தில் நிகழ்ந்த ரூ.139.5 கோடி மோசடி தொடா்பான 5-ஆவது வழக்கிலும் லாலுவை குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அறிவித்தது. பின்னா், இந்த குற்றத்துக்காக லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலமாக லாலுவுக்கான ஒட்டுமொத்த சிறைத் தண்டனை 19 ஆண்டுகளாகவும், அபராதம் ரூ.1.20 கோடியாகவும் அதிகரித்தது.

இந்நிலையில் பிா்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட லாலுவிற்கு தற்போது டொரண்டா வழக்கிற்கும் பிணை வழங்க ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.