ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘காங்கிரஸில் இணைவதாக பிரசாந்த் கிஷோர் கூறவில்லை’: தெலங்கானா அமைச்சர்

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள், அவர் கூறவில்லை என தெலங்கானா அமைச்சர் ராம ராவ் கூறியுள்ளார்.

News image

தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ்

Updated On :25 ஏப்ரல் 2022, 1:30 pm

DIN

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள், அவர் கூறவில்லை என தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ் கூறியுள்ளார்.

அடுத்தாண்டு தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு தேர்தல் யுத்திகளை வழங்கி இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் ஐ-பேக் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோா் காங்கிரஸில் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா அமைச்சர் கூறியதாவது:

“நாங்கள் பிரசாந்த் கிஷோரை முதல்முறையாக சந்திக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளை பலமுறை சந்தித்துள்ளோம். காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள், அவர் அதுபற்றி கூறவில்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் உத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.