‘காங்கிரஸில் இணைவதாக பிரசாந்த் கிஷோர் கூறவில்லை’: தெலங்கானா அமைச்சர்

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள், அவர் கூறவில்லை என தெலங்கானா அமைச்சர் ராம ராவ் கூறியுள்ளார்.
தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ்
தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ்
Published on
Updated on
1 min read

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள், அவர் கூறவில்லை என தெலங்கானா அமைச்சர் கே.டி. ராம ராவ் கூறியுள்ளார்.

அடுத்தாண்டு தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு தேர்தல் யுத்திகளை வழங்கி இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் ஐ-பேக் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோா் காங்கிரஸில் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா அமைச்சர் கூறியதாவது:

“நாங்கள் பிரசாந்த் கிஷோரை முதல்முறையாக சந்திக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளை பலமுறை சந்தித்துள்ளோம். காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள், அவர் அதுபற்றி கூறவில்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் உத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com