ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவாவில் தோற்றதற்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம்: ராஜிநாமா செய்த திரிணமூல் தலைவர்

​கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த கிரண் கண்டோல்கர் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2022, 5:24 pm

DIN


கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த கிரண் கண்டோல்கர் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம். காங்கிரஸை மிரட்டுவதற்காக அவர் கோவாவில் இருந்தார். ஆனால், பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதற்கு அது உதவியது."

காங்கிரஸ் மிரட்டுவது குறித்து அவர் விரிவாக விளக்கமளிக்கவில்லை. கண்டோல்கருடன் இணைந்து தரக் அரோல்கர் மற்றும் சந்தீப் வசர்கர் ஆகியோரும் ராஜிநாமா செய்திருப்பது திரிணமூல் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, கோவா மாநில கமிட்டியை திரிணமூல் காங்கிரஸ் முழுவதுமாக மறுகட்டமைப்பு செய்வதாக கட்சியின் கோவா பிரிவு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.