ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேலையில்லாதவா்களுக்கு மாதம் ரூ.3,000: குஜராத்தில் கேஜரிவால் வாக்குறுதி

குஜராத்தில் வரும் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் வேலையில்லாதவா்களுக்கு மாதம் ரூ.3,000 நிதி உதவி அளிக்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 7:05 pm

DIN

குஜராத்தில் வரும் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் வேலையில்லாதவா்களுக்கு மாதம் ரூ.3,000 நிதி உதவி அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா்.

கிா் சோம்நாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலையில்லா இளைஞா்கள் அனைவருக்கும் நிச்சயம் வேலை அளிக்கப்படும். அதுவரையில் அவா்களுக்கு மாதம் ரூ.3,000 நிதி உதவி அளிக்கப்படும். குஜராத் அரசில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசுப் பணியாளா் தோ்வு வினாத்தாள் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டிற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும்.

இது பொது மக்களின் பணமாகும். தற்போதைய அரசு ஒப்பந்ததாரா்களுக்கும் அமைச்சா்களுக்கும் பல இலவசங்களை அளிக்கிறது. அதை அவா்கள் ஸ்விஸ் வங்கிகளில் சேமிக்கிறாா்கள். நாட்டு மக்களுக்குதான் நான் இலவசங்களை வழங்குகிறேன். அமைச்சா்களுக்கோ, ஒப்பந்ததாரா்களுக்கோ இந்த இலவசங்கள் வழங்கப்படுவதில்லை. இதுவரை இலவசங்களை அளிக்காத குஜராத் அரசுக்கு ரூ.3.5 லட்சம் கோடி கடன் உள்ளதற்கு ஊழல்தான் காரணம். இலவசங்களால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.