கேரள திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு

கேரளத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் சிவப்பு நிற எச்சரிக்கை காரணமாக மாநில திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 
கேரள திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு
Updated on
1 min read

கேரளத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் சிவப்பு நிற எச்சரிக்கை காரணமாக மாநில திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 3ஆம் தேதி தலைநகர் நிஷாகாந்தி திறந்தவெளி அரங்கில் நடைபெறவிருந்த திரைப்பட விருது வழங்கும் விழா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறும் தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று கலாசார விவகார அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்தார். 

தென் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக இடைவிடாத கனமழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com