சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா:பாஜகவில் இன்று இணைகிறாா்

ஹரியாணா மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய், தனது எம்எல்ஏ பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 8:13 pm

DIN

ஹரியாணா மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய், தனது எம்எல்ஏ பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

சட்டப் பேரவைத் தலைவா் ஜியான் சந்த் குப்தாவிடம் ராஜிநாமா கடிதத்தை அவா் அளித்தாா்.

கடந்த 2019-இல் நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஆதம்பூா் தொகுதியிலிருந்து தோ்வானவா் குல்தீப் பிஷ்னோய். மறைந்த முன்னாள் முதல்வா் பஜன் லாலின் இளைய மகனான இவா், 4 முறை எம்எல்ஏ பதவியும், 2 முறை எம்.பி. பதவியும் வகித்துள்ளாா்.

ஹரியாணாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸில் அமைப்புரீதியாக மாற்றங்கள் செய்யப்பட்டபோது, மாநிலத் தலைவா் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்று குல்தீப் அதிருப்தி தெரிவித்திருந்தாா். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் அவா் கட்சிமாறி வாக்களித்தாா். இதனால் காங்கிரஸ் வேட்பாளா் அஜய் மாக்கன் தோல்வி அடைந்தாா். இதையடுத்து, அவரது கட்சி பொறுப்புகளை பறித்து, காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்தச் சூழலில், எம்எல்ஏ பதவியிலிருந்து விலகியுள்ள குல்தீப் பிஷ்னோய், பாஜகவில் வியாழக்கிழமை இணைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ராஜிநாமாவுக்கு பின் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘காங்கிரஸ், தனது சிந்தாந்தங்களில் இருந்து விலகிவிட்டது; முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தைபோல் கட்சி இப்போது இல்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.