கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் நான்காவது நாளாக கனமழை பெய்து வரும் நிலையில், அதன் தீவிரம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 13-ஐ எட்டியுள்ளது.
மேலும் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையில் சிக்கி ஒரு சிலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் வெள்ளத்தால் 150 ஏக்கர் காய்கறி விவசாயம் முற்றிலும் நாசமானது. இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மலை மாவட்டமான இடுக்கியின் எல்லையான எர்ணாகுளம் நேரியமங்கலம் பகுதியில் அதிகபட்சமாக 173 செ.மீ., மழை பெய்துள்ளது.
புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த கேரள மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவும், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

