
பிகாரில் போலி மதுபானம் குடித்த 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் போலி மதுபானம் குடித்த 7 பேர் பலியானார்கள். மேலும் 15 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ளனர்.
இதுகுறித்து சரண் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் கூறுகையில், குற்றவாளிகளை பிடிக்க மேக்கர், மர்ஹவுரா மற்றும் பெல்டி காவல் நிலைய பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம். நடவடிக்கை முடிந்த பிறகு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை கூற முடியும்.
ஆனால் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என்றார். மாநில அமைச்சர் அசோக் சௌத்ரி பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.