காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

சென்னை ஐஐடியில் படித்த 80% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு!

இந்தாண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஐஐடி சென்னையில் படித்த மாணவர்களில் 1,199 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது. 

கோப்புப் படம்

Published On :

இந்தாண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஐஐடி சென்னையில் படித்த மாணவர்களில் 1,199 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது. 

1959ஆம் ஆண்டு இந்திய அரசால் ஐஐடி சென்னை உருவாக்கப்பட்டது. 2021-2022 கேம்பஸ் பிளேஸ்மெண்டில் 80 சதவிகிதம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த வேலைவாய்ப்பில் 45 பணிகளுக்கான ஆணையை 14 சர்வதேச நிறுவனங்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 131 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 199 பணி நியமனங்களையும் வழங்கியுள்ளது. 61 எம்பிஏ மாணவர்களுக்கு இதில் வேலை வாய்ப்பு கிடைத்தது. 100 சதவிகிதம் எம்பிஏ மாணவர்களுக்கு இந்தாண்டு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாணவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 21.48 லட்சம். இதில் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 250,000 டாலர் சம்பளத்துடன் வேலை வழங்கப்பட்டுள்ளது. 

ஐஐடி சென்னை வேலைவாய்ப்பு ஆலேசகர் சி.எஸ். ஷங்கர் ராம், “இந்தாண்டு மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு வேலைவாய்ப்பு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. ஐஐடி சென்னை சார்பாக தேர்வுசெய்த நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.