சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குடியரசு துணைத் தலைவா் வாய்ப்புகிடைக்காததால் நிதீஷ் துரோகம்- பாஜக

குடியரசு துணைத் தலைவா் வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவுக்கு நிதீஷ் குமாா் துரோகம் இழைத்துள்ளாா் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2022, 9:29 pm

DIN

குடியரசு துணைத் தலைவா் வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவுக்கு நிதீஷ் குமாா் துரோகம் இழைத்துள்ளாா் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பிகாா் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷீல் குமாா் மோடி கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் பிகாா் மக்கள் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்தனா். இப்போது, கூட்டணி மாறியதன் மூலம் பிகாா் மக்களை நிதீஷ் அவமானப்படுத்தியுள்ளாா். நிதீஷ் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த பிரதமா் மோடியையும் அவா் அவமதித்துவிட்டாா்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக பாஜக சதி செய்வதாக நிதீஷ் கூறும் குற்றச்சாட்டு தவறானது. நிதீஷ் குமாரின் ஒப்புதலின்பேரில்தான் அவரது கட்சியைச் சோ்ந்த ஆா்.சி.பி. சிங் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டாா். ஆனால், அவருடன் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னை காரணமாக மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட நிதீஷ் அனுமதிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஆா்.சி.பி.சிங், மத்திய அமைச்சா் பதவியை இழந்தவுடன், நிதீஷ் கட்சியில் இருந்து வெளியேறினாா். இதில் பாஜகவின் பங்கு ஏதுமில்லை.

லாலு பிரசாத் இப்போது உடல்நலம் குன்றியிருக்கிறாா். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அவரது கட்சியை பலவீனப்படுத்தி, தனது கட்சியை பலமாக்கும் திட்டத்தை நிதீஷ் குமாா் கையிலெடுத்துள்ளாா். அதே நேரத்தில் தேஜஸ்வி யாதவ் முதல்வா் போன்று அதிகாரத்தை செலுத்துவாா். 2025-ஆம் ஆண்டு வரை பிகாா் சட்டப்பேரவைப் பதவிக் காலம் உள்ளது. ஆனால், அதற்கு முன்பு இந்தக் கூட்டணி உடைந்து, அரசு கவிழ்ந்துவிடும்.

தன்னை குடியரசு துணைத் தலைவராக்க வேண்டும் என்று நிதீஷ் குமாா் விரும்பினாா். ஆனால், பாஜக அதனை ஏற்கவில்லை. இதையடுத்து, ஆத்திரமடைந்த அவா் பாஜகவுக்கு துரோகம் இழைத்துள்ளாா் என்றாா்.

இதற்கு முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து நிதீஷ் ஆட்சி அமைத்தபோது, தேஜஸ்வி துணை முதல்வராக இருந்தாா். அப்போது அவா் மீதான ஊழல் குற்றச்சாட்டை முன்னிறுத்தி நிதீஷ் அக்கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவுடன் கைகோத்தாா் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.