வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உ.பி.: பாகிஸ்தான் கொடியை ஏற்றிய நபர் கைது 

உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :13 ஆகஸ்ட் 2022, 1:42 pm

DIN

குஷிநகர்: உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை தனது வீட்டில் ஏற்றியதாக சல்மான்(21) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மாவட்டத்தின் தாரியா சுஜான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் நேற்று(ஆகஸ்ட் 12) காலை 11 மணியளவில் பாகிஸ்தானின் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அவர் வீட்டில் ஏற்றி இருந்த  தேசியக் கொடியினை அகற்றினர். தேசியக்  கொடியை உருவாக்கிய அவரது(சல்மான்) அத்தை ஷானாஸ் (22) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.