மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தான்: சுதந்திர தின விழாவில் நன்னடத்தைக்காக 51 கைதிகள் விடுவிப்பு

ராஜஸ்தானில் சுதந்திர தின விழாவையொட்டி எஸ்எம்எஸ் அரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
பாகிஸ்தான் சிறைகளில் 680 இந்தியர்கள்: சிறைக்கைதிகளின் பட்டியல் பரிமாற்றம்
Updated On :13 ஆகஸ்ட் 2022, 6:28 am

PTI

ராஜஸ்தானில் சுதந்திர தின விழாவையொட்டி எஸ்எம்எஸ் அரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 51 கைதிகள் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப் படுகிறார்கள். மேலும் 21 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சிறந்த சேவைக்காக விருது வழங்கப்படுகிறது. 

மாநில அளவிலான விழா ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் அரங்கத்தில் இன்று முழு நாள் ஒத்திகை நடைபெறவுள்ளதாக பொது நிர்வாகத் துறை செயலாளர் ஜிதேந்திர குமார் உபாத்யாயா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  அபய் குமார் அரங்கிற்கு வருகை தந்து இன்று ஆய்வு நடத்தவுள்ளார். 

இந்த நிகழ்வின் போது, ​​முதல்வர் அசோக் கெலாட், இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கத்தை வழங்குகிறார். மேலும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளான தினேஷ் எம்என் மற்றும் ஜோஸ் மோகன் உள்பட 17 அதிகாரிகளுக்கு காவல்துறை பதக்கங்களை வழங்க உள்ளது. 

விடுதலை செய்யப்பட உள்ள 51 கைதிகளில் 36 பேர் மொத்த சிறைத்தண்டனையின் மூன்றில் இரண்டு பங்கையும், பாதி சிறைவாசத்தை முடித்த 60 வயதுக்கு மேற்பட்ட ஐந்து ஆண் கைதிகளும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த 10 கைதிகளும் சிறைவாசத்தை முடித்துள்ளனர். 

அபராதத் தொகை கட்ட முடியாமல் நலிவடைந்த கைதிகள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் அவர்களை விடுவிக்க முடியவில்லை என அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.