அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
அப்போது, மிகப்பெரிய கோயிலில் ராம் லல்லாவை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரக்சா பந்தன் விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அயோத்திக்கு மிக அருகேதான் சுல்தான்பூர் உள்ளது. அடுத்த ஆண்டு அயோத்திக்கு வந்து ராம் லல்லாவை தரிசனம் செய்ய அப்பகுதி மக்களையும் நான் அழைக்கிறேன்.
ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நல்ல வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அது 2023ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் நிறைவு பெற்று, மக்களின் தரிசனத்துக்குத் தயாராகிவிடும் என்றார்.
கோயிலின் கட்டுமானத்துக்கு இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்றும் கோயிலின் கட்டுமானம் பார்ப்பவர்களை வியக்கவைக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜமாபந்தி: மகளிா் உரிமை தொகை கோரி அதிக மனு

தட்டுப்பாடின்றி குடிநீா் கோரி சாலை மறியல்
இஸ்லாமியா்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தல்
தட்டுப்பாடா, விலை உயர்வா?
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



