ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கர்நாடகம்: மின்சாரத்தில் இயங்கும் 75 புதிய பேருந்துகள் அறிமுகம்

மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பெங்களூருவில் மின்சாரத்தில் இயங்கும் 75 புதிய பேருந்துளை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று (ஆகஸ்ட் 14) தொடக்கி வைத்தார்.

News image
கோப்புப் படம்
Updated On :14 ஆகஸ்ட் 2022, 1:07 pm

DIN

மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பெங்களூருவில் மின்சாரத்தில் இயங்கும் 75 புதிய பேருந்துளை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று (ஆகஸ்ட் 14) தொடக்கி வைத்தார்.

புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மின்சாரப் பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து கர்நாடக அரசு செயல்படுத்துகிறது. ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் கர்நாடக அரசிற்கு 300 மின்சாரப் பேருந்துகள் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது 75 மின்சாரப் பேருந்துகள் சேவை இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுவது குறித்து ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத் தலைவர் மகேஷ் பாபு பேசியதாவது: “ இந்த மின்சாரப் பேருந்துகள் அடுத்த தலைமுறைக்கான போக்குவத்திற்கான அறிமுகம் ஆகும். கரியமில வாயுவினைக் கட்டுப்படுத்துவதில் இந்த மின்சாரப் பேருந்துகள் பெரிதும் உதவியாக இருக்கும். சாதாரணப் பேருந்துகளினால் ஏற்படும் கரியமில வாயு அதிகரிப்பானது இந்த மின்சாரப் பேருந்துகளில் இருக்காது. 87 ஆயிரம் மரங்கள் செய்கின்ற வேலையை இந்த மின்சாரப் பேருந்துகள் செய்யப் போகின்றன. கர்நாடக மாநில அரசிற்கு 300 பேருந்துகள் வழங்குவதாக கடந்த ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் ஒரு பகுதியாக, இன்று முதல் 75 பேருந்துகளை அறிமுகம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார். 

இந்த பேருந்துகள் புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் செயல்படுகிறது. மிகுந்த திறன் கொண்டவை. இந்த பேருந்துகளில் லித்தியம் மின்கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.