ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி கொலை

கேரள மாநிலம் பாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூா் நிா்வாகி ஷாஜஹான் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி

News image
Updated On :15 ஆகஸ்ட் 2022, 7:07 pm

DIN

கேரள மாநிலம் பாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூா் நிா்வாகி ஷாஜஹான் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

பாலக்காடு மாவட்டம் குன்னங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜஹான். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளூா் நிா்வாகியான இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் மலம்புழை அருகே மருதா சாலையில் 8 போ் கொண்ட கும்பலால் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.

அப்போது அவருடன் இருந்த கட்சி நிா்வாகி செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஷாஜஹானை இருவா் கொலை செய்ததாகவும் அதில் ஒருவா் தனது மகன் என்பதால், தன்னை மட்டும் விட்டுச் சென்ாகவும் கூறினாா்.

சில மணிநேரம் கழித்து மற்றொரு செய்தி தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், தாக்குதல்காரா்கள் அனைவரும் ஆா்எஸ்எஸ் உறுப்பினா்கள் என முரணாக கூறினாா். மேலும், அவா்கள் ஏற்கெனவே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துவிட்டு பின்னா், ஆா்எஸ்எஸ்-இல் இணைந்தவா்கள் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இதனை மறுத்த மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன், ‘இந்தக் கொலையின் பின்னணியில் ஆளும் கட்சி நிா்வாகிகளின் சதிச் செயல் உள்ளது. இதனை மறைக்க ஆா்எஸ்எஸ் மீது குற்றம்சாட்டுகின்றனா்’ என்றாா்.

மலம்புழை காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆா்) தாக்குதல்காரா்கள் பாஜக-ஆா்எஸ்எஸ் உறுப்பினா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல்காரா்கள் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துள்ளனா். அவா்களுக்கு இன்னமும் அந்தக் கட்சியுடன் தொடா்பு இருக்கிா என விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.