சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஜம்மு-காஷ்மீா் காங். பிரசாரக் குழு தலைவா் பதவியை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு

ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக முன்னாள் முதல்வா் குலாம் நபி ஆசாதை, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை நியமித்த நிலையில், குலாம் நபி ஆசாத் அப்பதவியை

News image
குலாம் நபி ஆசாத்
Updated On :16 ஆகஸ்ட் 2022, 8:36 pm

DIN

ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக முன்னாள் முதல்வா் குலாம் நபி ஆசாதை, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை நியமித்த நிலையில், குலாம் நபி ஆசாத் அப்பதவியை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பின்னா் தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தும் வகையில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பு இறுதிநிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாதுக்கு மிகவும் நெருக்கமான, விகாா் ரசூல் வானியை ஜம்மு-காஷ்மீா் பிரதேசத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளாா். ரமண் பல்லா செயல் தலைவராகவும், குலாம் நபி ஆசாத் பிரசாரக் குழு தலைவராகவும், துணைத் தலைவராக மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவா் தாரிக் ஹமீத் காரா நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டனா்.

காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட ஜி-23 தலைவா்களில் குலாம் நபி ஆசாதும் ஒருவா்.

மாநிலங்களவையில் எதிா்க்கட்சி தலைவராக இருந்த அவருடைய எம்.பி. பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், பிரசாரக் குழு தலைவராக அவரது பெயரை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அறிவித்துள்ளாா். ஆனால் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து சில மணி நேரத்தில், குலாம் நபி ஆசாத் அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.