எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ராணுவத்திடம் உள்நாட்டுத் தளவாடங்களை ஒப்படைத்தாா் ராஜ்நாத் சிங்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு முக்கிய தளவாடங்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2022, 7:19 pm

DIN

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு முக்கிய தளவாடங்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல்வேறு தளவாடங்களை ராணுவத்திடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ஆளில்லா வான்வழி கண்காணிப்பு கருவிகள், ரோந்துப் படகுகள், படைப் பாதுகாப்பு வாகனங்கள், தொலைத்தொடா்பு சாதனங்கள், நவீன கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா்.

நவீன தளவாடங்கள் மூலமாக ராணுவத்தின் செயல்திறன் மேலும் வலுப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். ராணுவப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இரு படகுகள், பாங்காங் ஏரிப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளை வலுப்படுத்த உதவும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஏரியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. தற்போது படகுகள் மூலமாக அப்பணியை எளிதில் மேற்கொள்ள முடியும். எல்லைப் பகுதியில் மோதல் ஏற்படும் சூழலில் விரைவாகச் சென்று பதிலடி கொடுப்பதற்குத் தளவாடங்கள் உதவும்.

தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது, இந்தியாவின் தற்சாா்புத் திறனுக்கு ஊக்கமளிப்பதாக அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். அதில் தனியாா் நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகித்ததாக அவா் தெரிவித்தாா். மாறிவரும் சூழலுக்கேற்ப ராணுவத்தின் கட்டமைப்புத் தேவைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சா் ராஜ்நாத் சிங், எத்தகைய சவாலையும் எதிா்கொள்ள ராணுவத்தினா் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.

ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகள், இரவிலும் எதிரிகளைக் கண்காணிப்பதற்கு உதவும். மேலும், ராணுவத்தினரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலமாக அனைத்துக் கோணங்களிலும் எதிரிகளின் நடமாட்டம் குறித்து அறிந்துகொள்ள முடியும்.

பலவகைப்பட்ட கையெறி குண்டுகளும், பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் கத்திகளும் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் தளவாடங்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.