பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு முடிவு

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஆகஸ்ட் 2022, 10:31 am

DIN

புது தில்லி: விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுகளுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயத் துறையில் அதிகளவு கடன்  தரும் நோக்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கான அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் வரம்பை ரூ.50,000 கோடியாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதால் இவ்வாண்டு வட்டிக்கு மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மீனவர்கள், கால்நடை விவசாயிகளுக்கும் இந்த மானியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான வட்டி மானியத்துக்கு ரூ.34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான மானியங்களும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.