மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு முடிவு

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஆகஸ்ட் 2022, 10:31 am

புது தில்லி: விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுகளுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயத் துறையில் அதிகளவு கடன்  தரும் நோக்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கான அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் வரம்பை ரூ.50,000 கோடியாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதால் இவ்வாண்டு வட்டிக்கு மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மீனவர்கள், கால்நடை விவசாயிகளுக்கும் இந்த மானியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான வட்டி மானியத்துக்கு ரூ.34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான மானியங்களும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.