/

லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி; ஒருவர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2022, 7:30 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

அகமத் நகர் - புணே தேசிய நெடுஞ்சாலையில் ரஞ்சன்கான் பகுதிக்கு அருகே நேற்று நள்ளிரவு இந்த விபத்து ஏற்புட்டள்ளது. 

கண்டெய்னர் லாரி தவர்ணா பாதையில் வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டதாகவும் மாவட்ட எஸ்.பி. அபினவ் தேஷ்முக் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய டிரைவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.