பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இமாச்சலில் இந்தாண்டு பருவ மழைக்கு 205 பேர் பலி

இமாச்சலில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் மாயமாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:16 am

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து ஒன்றரை மாதத்திற்குள் இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் மாயமாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

ஜூன் 29 முதல் சேதமடைந்த சாலைகள், நீர் வழித்தடங்கள் மற்றும் மின்சாரம் என மாநிலத்திற்கு மொத்தம் ரூ.1,014.08 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 16 வரை ஏற்பட்ட 35 விபத்துகளில் குறைந்தது 103 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மரம் மற்றும் பாறைகள் விழுந்ததில் 33 பேர் பலியாகினர். 

பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 6 சம்பவங்களில் 25 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். 48 நிலச்சரிவுகளில் 7 பேர் இறந்துள்ளனர். மேலும் திடீர் வெள்ளத்தால் மூன்று பேர் உயிரிழந்தனர் என்றார். 

தவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் 120 விலங்குகள் உயிரிழந்துள்ளன, 95 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன, 335 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மோக்தா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.