தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் மீது பலாத்கார வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் மீது 2018ஆம் ஆண்டு நடந்த பலாத்கார வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் மீது பலாத்கார வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
Updated On :18 ஆகஸ்ட் 2022, 12:47 pm

DIN

பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் மீது 2018ஆம் ஆண்டு நடந்த பலாத்கார வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பலாத்கார வழக்கு மீது விசாரணை தொடங்கி மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷாநவாஸ் ஹுசைன் தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி. 

மேலும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்ய, காவல்துறை தயக்கம் காட்டியிருப்பது ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், புகார் அளித்தால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறி, இது குறித்து அவர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யுமாறு உத்தரவிடக் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், அவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தில்லி உயர் நீதிமன்ற, ஷாநவாஸ் ஹுசைனின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் ஷாநவாஸ் ஹுசைன் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ஷாநவாஸ் ஹுசைன் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த முதல் தகவல் அறிக்கை அவரது புகழை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.