விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காந்தி புகைப்படம் சேதம்: ராகுல் காந்தியின் ஊழியர்கள் உள்பட 4 காங்கிரஸார் கைது

கேரளத்தில் காந்தி புகைப்படத்தை சேதப்படுத்தியதற்காக ராகுல் காந்தியின் 2 ஊழியர்கள் உள்பட 4 காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். 

News image
ராகுல் காந்தியின் அலுவலகம்
Updated On :19 ஆகஸ்ட் 2022, 11:43 am

DIN

கேரளத்தில் காந்தி புகைப்படத்தை சேதப்படுத்தியதற்காக ராகுல் காந்தியின் 2 ஊழியர்கள் உள்பட 4 காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். 

கேரள மாநிலம் வயநாட்டில் எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை  கடந்த ஜூன் 24 ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான இந்திய மாணவா் கூட்டமைப்பைச் (எஸ்எஃப்ஐ) சோ்ந்தவா்கள் அடித்து நொறுக்கினர். அப்போது, சுவரில்  மாட்டப்பட்டிருந்த காந்தியின் புகைப்படமும் சேதமானது.

பின், இந்தத் தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், புகைப்படத்தை அங்கு பணியாற்றி வந்த 2 ஊழியர்கள் உள்பட 4 காங்கிரஸார் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.

அதனால், இன்று ராகுல் காந்தியின் அலுவலகத்திற்குச் சென்ற கல்பெட்டா சரக காவலர்கள் 4 பேரை கைது செய்தனர். பின்,  அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.