விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறைகள்தோறும் வகுப்பறைகள்: மாநில அரசின் புது முயற்சி

சிறைக் கைதிகள் கல்வி பயிலும் சூழலை எளிதாக்கும் வகையில் சிறைகள்தோறும் வகுப்பறைகளைக் கட்ட பஞ்சாப் மாநில சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.

News image
சிறைகள்தோறும் வகுப்பறைகள்: மாநில அரசின் புது முயற்சி
Updated On :19 ஆகஸ்ட் 2022, 10:57 am

DIN


சண்டிகர்: சிறைக் கைதிகள் கல்வி பயிலும் சூழலை எளிதாக்கும் வகையில் சிறைகள்தோறும் வகுப்பறைகளைக் கட்ட பஞ்சாப் மாநில சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.

சிறைக் கைதிகளின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், புதுவாழ்வு பிறக்கவும், ஒவ்வொரு சிறையிலும் 50 பேர் அமர்ந்து கல்வி பயிலக் கூடிய வகுப்பறைகளைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறையில் இருப்பவர்களுக்கு கல்வியும், நன்னடத்தையும் கிடைக்கும் வகையில் அரசு இந்த நல்ல முடிவை எடுத்திருப்பதாக சிறைத் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் கூறியுள்ளார்.

ஒவ்வொரு சிறையிலும் தலா 50 மாணவர்கள் அமர்ந்து பயிலக் கூடிய இரண்டு முதல் 3 வகுப்பறைகள் கட்டப்படும். எதிர்காலத்தில் அதிக வகுப்பறைகள் தேவைப்பட்டால் அதற்கான வசதியும் செய்து கொடுக்கப்படும். நூலகமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.