தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியுள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கள்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்து நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன்படி நேற்று முதலே உத்தரபிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தில்லி நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
விவசாயிகள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதையடுத்து தில்லி-மீரட் சாலை, காஸிப்பூர் எல்லை, சிங்கு எல்லை உள்ளிட்ட பகுதிகளை காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து திட்டமிட்டபடி தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பே இந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படிக்க | தில்லி கலால் முறைகேடு: 8 பேருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகாரம் யாருக்கு? பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 - செய்திகள் உடனுக்குடன்!

திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு

திருப்பதியில் த்ரிஷா சிறப்பு தரிசனம்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

