விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காங்கிரஸ் தலைவராக ராகுல்தான் பொறுப்பேற்க வேண்டும்: அசோக் கெலாட் திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 6:06 am

DIN

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகினாா். இதையடுத்து இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தி பொறுப்பேற்றார். அதன்பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர் பதவியில் இருந்து விலக முற்பட்டு, பின்னர் காரியக் குழு முடிவின்படி அவர் பதவியில் தொடர்ந்து வருகிறார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற முடிவு வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அக்கட்சி உள்ளது. தற்போதும் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி தயாராக இல்லை என்றே தெரிகிறது. அவர் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். முன்னதாக, காந்தி குடும்பத்திலிருந்துதான் கட்சித் தலைவா் வர வேண்டுமென்று அவசியமில்லை என்ற கருத்தையும் ராகுல் தெரிவித்திருந்தாா்.

ஆனால், ராகுல் காந்தியே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் காங்கிரஸின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், 'காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல்காந்திதான் ஏற்க வேண்டும். இல்லையெனில் கட்சித் தொண்டர்களிடையே அது ஏமாற்றத்தை ஏற்படுத்தும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் இந்த பதவியை ஏற்க வேண்டும். இல்லையெனில் தொண்டர்கள் வருத்தப்படுவார்கள்.

காந்தி குடும்பம், காந்தி இல்லாத குடும்பம் என்றில்லை, அனைவரும் ராகுல் தலைவராக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். பாஜகவையும் ஆம் ஆத்மியையும் எதிர்கொள்ள அவரே தலைவராக வேண்டும்.

கடந்த 32 ஆண்டுகளில் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ பொறுப்பேற்றதில்லை. எனினும் அவர்களின் குடும்பத்தைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எதுவும் நடக்கவில்லை என கேஜரிவால் ஏன் கூறுகிறார்? ஏன் எல்லோரும் காங்கிரஸை தாக்குகிறார்கள்?

ஏனெனில் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் காங்கிரஸ் கட்சி ஒரே மாதிரியாக உள்ளது. அனைத்து மதங்களையும் வகுப்பினரையும் அழைத்துச் செல்கிறது' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.