மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

இந்திய எல்லைப் பகுதியில் 2 பாக். பயங்கரவாதிகள் பலி

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கன்னிவெடியால் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :24 ஆகஸ்ட் 2022, 8:01 am

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கண்ணிவெடியால் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேற்றிரவு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ எல்லைப் பகுதியை நெருங்கியுள்ளனர். 

எல்லையைக் கடக்க 150 மீட்டர் தொலைவு மட்டுமே இருந்த நிலையில், 2 பயங்கரவாதிகளும் கண்ணிவெடியை மிதித்ததால் உடல் சிதறி பலியானதாகவும் அவர்களின் உடலை இன்று காலை மீட்டதாகவும் இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று செவ்வாய்க்கிழமை கண்ணிவெடியில் சிக்கி 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.