தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

'எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுங்கள்' - பாஜகவுக்கு மணீஷ் சிசோடியா அறிவுறுத்தல்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேசியது தொடர்பாக, பாஜகவினர் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுமாறு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 8:04 am

DIN

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேசியது தொடர்பாக, பாஜகவினர் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுமாறு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களான சோம்நாத் பார்தி, சஞ்சீவ் ஷா, குல்தீப் குமார், அஜய் தத் ஆகிய நால்வரும் பாஜகவில் சேராவிட்டால் சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என பாஜகவினர் மிரட்டியதாகக் கூறியுள்ளனர். 

இதக்குறித்துப் பேசிய  தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பாஜகவினர் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளுங்கள். எங்களுடைய எம்எல்ஏக்கள் பகத் சிங்கின் சீடர்கள். அவர்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள், அவரை உயிரைத் தியாகம் செய்வார்கள். அவர்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையால் எந்த பயமும் இல்லை' என்று கூறியுள்ளார். 

முன்னதாக தில்லி கலால் கொள்கை வழக்கில், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.