திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

40 எம்.எல்.ஏ.க்களிடம் விலை பேச பாஜக திட்டம்: ஆம் ஆத்மி தலைவர் குற்றச்சாட்டு

பாஜக 40 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் திலீப் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

News image

திலீப் பாண்டே

Updated On :25 ஆகஸ்ட் 2022, 1:13 pm IST

பாஜக 40 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் திலீப் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை செய்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தால் ரூ. 20 கோடி கொடுப்பதாக பாஜகவிலிருந்து பேரம் பேசப்பட்டதாகவும், இணையாவிட்டால் பொய் வழக்குத் தொடரப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் நேற்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய, ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரனா திலீப் பாண்டே ‘பாஜக தில்லியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. முதலில் 4 பேரிடம் பேரம் பேசிய பிறகு மேலும் 40 எம்எல்ஏக்களை விலை பேச பாஜக முயன்று வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தில்லியில் ஆம் ஆத்மியிடம் 62 எம்எல்ஏக்களும், பாஜகவிடம் 8 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

தில்லியில் பெருன்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்றால் பாஜவிற்கு இன்னும் 28 எம்எல்ஏக்கள் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.