அதில், ‘கரோனா தொற்றுக்கு பின்னா் தென்னை விவசாயிகளும், தேங்காய் மில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ முதல் 2800 கிலோ வரையிலான கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு ஏக்கருக்கு 216 கிலோ தான் அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது. பொது சந்தையில் விலை கடுமையாக குறைந்துள்ளது. ஆனால் யூரியா விலையேற்றம், உற்பத்தி செலவு, அறுவடை செலவு (ஒரு தேங்காய்க்கு ரூ.3) போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு 800 கிலோ கொப்பரையை கொள் முதல் செய்யவும் கொள் முதல் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கவும் வேண்டும்’ என கோரிக்கை வைத்தனா்.