சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நட்டாவுக்கு அடுத்து பாஜக தலைவர் யார்?

ஜே.பி.நட்டாவிற்குப் பின் பாஜகவின் அடுத்தத் தலைவராக தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Updated On :30 ஆகஸ்ட் 2022, 9:51 am

DIN

ஜே.பி.நட்டாவிற்குப் பின் பாஜகவின் அடுத்தத் தலைவராக தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காங்கிரஸில் அக்டோபர் மாதத்திற்குள் கட்சியின் புதிய தலைவரைத் தேர்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவின் தற்போதைய தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக்காலமும் 2023, ஜனவரி மாதம் நிறைவடைய உள்ளது.

இதனால், பாஜக நட்டாவின் பதவிக்காலத்தை மீண்டும் நீட்டிக்கவில்லை என்றால் புதிய தலைவராக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் தேசிய தலைவர் அதிகபட்சமாக இரண்டு முறை தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்பதால் நட்டாவின் பதவி நீட்டிப்பு குறித்து இரண்டு யோசனைகள் உலவுகின்றன. அடுத்த பொதுத் தேர்தல் வரை ஒரு ஆண்டு அல்லது முழுமையாக மூன்றாண்டு பதவிக்காலம். 

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர், ‘நட்டாவின் தலைவர் பொறுப்பை கட்சி அடுத்த தேர்தல் வரை நீட்டிக்கவில்லையென்றால் புதிய தலைவராக தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும், இப்பதவிக்கு பூபேந்திர யாதவ் பெயரும் அடிபடுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், நட்டாவின் பணிகள் திருப்திகரமாக இருந்துள்ளதாகவும் அவரின் தலைமையில் பல மாநிலங்களில் பாஜகவிற்கு முன்னேற்றம் கிடைத்துள்ளன என்றும் மற்றொரு தலைவரும் கூறியுள்ளார்.

ஆனால், மீண்டும் 3 ஆண்டு பதவி ஜே.பி.நட்டாவுக்கு வழங்கப்படவில்லை என்றால் கட்சியை ஒருங்கிணைப்பதில் திறனும் அனுபவமும் கொண்ட  ஏபிவிபி-யில் இணைந்து மாணவப் பருவத்திலிருந்து  பாஜகவின் தீவிர உழைப்பாளியாக இருக்கும் தர்மேந்திர பிரதானுக்கு தலைவர் பொறுப்புக் கிடைக்கும் என்றே கருதுகிறார்கள்.

அதற்குக் காரணம், முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பார்வையில் பிரச்னைகளைத் தீர்ப்பவரகவே பிரதான் இருந்துள்ளார். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி கட்சியில் பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் அதைத் தீர்த்து வைக்க பிரதானுக்கு பொறுப்புகளை வழங்கியுள்ளார்.

ரமேஷ் பொக்ரியால் மத்திய கல்வி அமைச்சராக இருந்தபோது, 2020 தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த அரசாங்கம் போராடியபோது, மோடி அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கி கடந்த ஆண்டு அத்துறையை பிரதானிடம் ஒப்படைத்தார்.

பூபேந்திர யாதவைப் பொறுத்தவரை, அவர் சமீபத்தில் கட்சியின் மத்திய தேர்தல் குழுவில் சேர்க்கப்பட்டவர்.

ஆனால், ’நட்டாவை மாற்றும் போட்டியில் என்ன நடந்தாலும் தர்மேந்திர பிரதானே முன்னணி வகிப்பார்’ என பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.