ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தில்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

தில்லி மாநகராட்சியில் 250 வாா்டுகளில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :4 டிசம்பர் 2022, 4:02 am

DIN

தில்லி மாநகராட்சியில் 250 வாா்டுகளில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தலைநகா் தில்லியில் உள்ள மாநகராட்சியின் 250 வாா்டுகளுக்கான தோ்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 250 வார்டுகளிலும் ஆம்ஆத்மி, பாஜக களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி 247 வார்டுகளில் போட்டியிடுகிறது. மாநகராட்சி தேர்தலில் 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாலை 5.30 மணி வரை நடைபெறும் தேர்தலில் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்களிக்க 13,638 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தோ்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. வாக்குகள் டிசம்பா் 7-ஆம் தேதி எண்ணப்படும். வாக்குப்பதிவையொட்டி பாதுகாப்புப் பணிகளில் காவல்துறை, துணை ராணுவம், மத்திய ஆயுதப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.