சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வெளியானது யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)  சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வின் முடிவுகளை இன்று (டிசம்பர் 6) வெளியிட்டுள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2022, 5:16 pm

DIN

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)  சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வின் முடிவுகளை இன்று (டிசம்பர் 6) வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்டப் பதவிகள் அடங்கிய பல பதவிகளுக்கு தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வினை நடத்தியது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை இன்று ( டிசம்பர் 6) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நேர்முகத் தேர்விற்கு தேர்வானவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது வரிசை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்கள், கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் இட ஒதுக்கீடு கோரினால் அதற்குத் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்வின்போது சரிபார்க்கப்படும் எனவும் தேர்வாணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறுவது குறித்த அட்டவணை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் விரைவில் வெளியாகும். முதன்மைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு தில்லியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் அனுப்பப்படும். இந்தக் கடிதத்தினை பெற இயலாதவர்கள் தேர்வாணையத்தினை 011-23385271, 011-23381125, 011-23098543 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.